24.5.12
வணக்கம் நண்பர்களே ,
காலம் மாறிக்கொண்டே வருவது போலவே மக்களின் ஆசைகளும் மாறிக்கொண்டே வருகின்றன . விதவிதமான மொபைல் போன்களை பயன்படுத்தி வந்த நம் மக்கள் இப்போது அடுத்த கட்டமாக டேப்லட்டை விரும்ப ஆரம்பித்துவிட்டனர் .
அதற்கேற்ப பல முன்னணி நிறுவனங்களும் பல மாடல்களில் டேப்லட்டை அறிமுகபடுத்தி வருகின்றன.எலக்ட்ரானிக் சாதன உலகில் அதிக சாதனைகளை படைத்து வரும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப்-2 என்ற டேப்லட்டை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.
உலகெங்கும் சக்கை போடு போட்டு வரும் இந்த டேப்லட்டை இப்போது சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீ-புக்கிங்கில் பெறலாம். ப்ரீ-புக்கிங் செய்யும் அளவிற்கு இதில் உள்ள முக்கிய தொழில் நுட்ப அம்சங்களையும் பார்ககலாம்.

ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆரப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் முதல் டேப்லட், கேலக்ஸி டேப்-2 என்ற பெருமையையும் தட்டி செல்கிறது இந்த டேப்லட். ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லட் 7 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.
இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.

344 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும். இதன் மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி கார்டும் சப்போர்ட் செய்யும். இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை இந்தியாவில் பெற இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை ஆன்லைனில் ரூ.23,250 விலைக்கு ப்ரீ-புக்கிங் செய்யலாம். இ-மெயில் ஐடி, மொபைல் எண், பெயர், முகவரி போன்ற விவரத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டினை ப்ரீ-புக்கிங் செய்யலாம்.
24.5.12 by ஈரோடு தங்கதுரை · 0
வணக்கம் நண்பர்களே,
கடந்த சில வருடங்களாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் நடந்த போட்டியின் காரணமாக தொலைபேசி கட்டணங்கள் வெகுவாக குறைத்திருந்தன .
ஆனால் சமீபத்தில் அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த மத்திய தொலைதொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மொபைல் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அரசு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதை தொடர்ந்து மீண்டும் தொலைபேசி கட்டணம் உயரும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் (TRAI) கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி, சென்னை பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில், மொபைல் கட்டணங்கள் 90 பைசாவாக உயர்கிறது. நாடு முழுவதுமாக 20-பைசாவில் இருந்து 34 பைசா வரை கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அலை கற்றைகளின் கட்டணம் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3,622 கோடியாக உயர்த்துவதாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளன. இதனால் தொலை தொடர்பு சேவையின் கட்டணம், மாநகர பகுதிகளில் நிமிடத்திற்கு 90 பையா உயரும் என்று தெரிகிறது.
by ஈரோடு தங்கதுரை · 0
நண்பர்களுக்கு வணக்கம்,
ஆன்லைன் வலைத்தளமான மான்ஸ்டர் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேடிற்கான மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு மான்ஸ்டர் நிறுவனம் சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் படிப்பிற்கு தகுந்த வேலையை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த மான்ஸ்டர் நிறுவனம், எலக்ட்ரானிக் சாதன உலகில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவதற்கு புதிய மொபைல் அப்ளிக்கேஷனை வழங்குவது மிக சிறப்பான விஷயம்.
ஆன்லைன் வலைத்தளமான மான்ஸ்டர் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேடிற்கான மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு மான்ஸ்டர் நிறுவனம் சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் படிப்பிற்கு தகுந்த வேலையை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மான்ஸ்டர் நிறுவனம், எலக்ட்ரானிக் சாதன உலகில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவதற்கு புதிய மொபைல் அப்ளிக்கேஷனை வழங்குவது மிக சிறப்பான விஷயம்.


மான்ஸ்டரின் இந்த புதிய அப்ளிக்கேஷனை, ஆப்பிள் ஸ்டோர் மூலம் எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மான்ஸ்டரில் இனி எளிதாக வேலை சம்மந்தமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த வசதியை ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சவுகரியமான ஒன்று.
மான்ஸ்டரிடம் இருந்து வரும் வேலை பற்றிய விவரங்களை இ-மெயிலை திறந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
ஆனால் இந்த புதிய மான்ஸ்டர் அப்ளிக்கேஷன் மூலம் வேலை சம்மந்தமாக எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளது என்பது போன்ற தகவல்களை மொபைல்களிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த மான்ஸ்டரின் புதிய மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் பெறலாம்.
by ஈரோடு தங்கதுரை · 0
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்தியாவில் உயந்த ரக செல்போன் விரும்பிகளின் வெகு நாள் ஆசை இப்போது நிறைவேற போகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் சக்கை போடு போட்டது. இதை தொடர்ந்து பல நிறுவங்கள் புதிய தொழில் நுட்பம கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இப்போது ஆப்பிளின் அடுத்த வாரிசான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அறிமுகமாக உள்ளது.இதற்க்கு போட்டியாக சாம்சங் அறிவித்த மாடல் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 .

எனவே தான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மாதம் 31-ஆம் தேதி இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருகை தரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

4.8 இஞ்ச் திரை வசதியையும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்ட இந்த மாடல் பற்றி அதிக விபரங்களை இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
இது போல் இன்னும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று பல பேர் ஆவலுடன் இருக்கின்றனர். அந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று தான்.
by ஈரோடு தங்கதுரை · 0
18.5.12
நண்பர்களே வணக்கம், ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றவுடன் நம்மில் பல பேர் சொல்லுவது அதன் விலையை தான். இந்த விலைக்குள் ஸ்மார்ட்போன் வேண்டும் என்கிறார்கள். அப்படி விலையை வைத்து ஸ்மார்ட்போனை எடுத்தாலும் அந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதா என்று தெரிந்து கொள்ள இதோ இங்கே ஓர் பட்டியல். இதில் ரூ.10,000 விலைக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் எது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் (பி5512) ஸ்மார்ட்போன் முதலில் உள்ளது என்று சொல்லலாம். கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டியூவல் சிம் நெட்வொர்கிற்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும்.
இதில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் எளிதாக இயங்க 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது.
கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் 2.6 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான புகைப்படத்தினையும் எளிதாக கொடுக்கும்.
இது மட்டுமல்லாமல் இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டது.

இந்த கேலக்ஸி ப்ரோ டியோஸில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் 1,350 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் நீடித்து உழைக்கும் சிறப்பான ஆற்றலை பெற முடியும். மேலும் இந்த பேட்டரி 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,200 விலையில் பெற முடியும்.
அடுத்து மோட்டோரோலா ஃபையர் எக்ஸ்டி ஸ்மார்ட்போனும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை வழங்கும். வைபை, புளூடூத் மற்றும் எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனையும் கவர்ச்சிகரமான விலையில் பெறலாம்.

இந்த மோட்டோரோலா ஃபையர் ஸ்மார்ட்போனை ரூ.9,400 விலையில் பெறலாம்.
அடுத்து ப்ளாக் பெர்ரி : இந்த பிளாக் பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போன் 1.2 தடிமன் கொண்டது. கையாளுவதற்கு எளிதாக இருக்கும் இந்த கர்வ் ஸ்மார்ட்போன், 2.44 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரையினை கொண்டதால், 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.

பிளாக்பெர்ரி 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 600 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக வழங்கும். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000.
அடுத்ததாக யூசர் ஃப்ரென்ட்லி என்று பெயரெடுத்த நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனையும் மேல் கூறப்பட்டுள்ள விலையில் எளிதாக பெற முடியும். சிம்பையன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போனில், 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் டிஎப்டி திரை தொழில் நுட்பத்துடன் 640 X 360 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். புகைப்படம், வீடியோ பற்றிய கவலை இந்த ஸ்மார்ட்போனை பொருத்த வரையில் தேவையே இல்லை.
இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ்,
வைபை போன்ற தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் ரூ.9,500 விலையில் கிடைக்கும்.
வைபை போன்ற தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் ரூ.9,500 விலையில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-50 நின்ஜா ஸ்மார்ட்போனும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிக முக்கியமாக பேசப்படுகிற தொழில் நுட்பம் இதில் உள்ள எய்ஷா என்ற வாய்ஸ் கைடடு தொழில் நுட்பம்.
இந்த தொழில் நுட்பம், ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்பனில் உள்ள சிரி அப்ளிக்கேஷன் போல என்று கூறலாம்.
இதன் 3.1 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக தகவல்களை பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜ்ரபிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,500 விலையில் பெறலாம்.
18.5.12 by ஈரோடு தங்கதுரை · 3
8.5.12
வணக்கம் நண்பர்களே, உலகெங்கும் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கும் 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை இந்த மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.
உயர்ந்த கேமராவின் மூலம் அனைவரையும் மூச்சிறைக்க செய்த நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகுமா? என்று கேள்வியோடு காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விடை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்திய மொபைல் மார்கெட்டில் கால் பதிக்க இருக்கிறது.

சமீபத்தில் தான் ஆஷா-202 மற்றும் நோக்கியா-302 மொபைல்களை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் இதை தொடர்ந்து, நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் களமிறக்க உள்ளது.
சிம்பையன் பெல் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரையும் வழங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரையினை கொண்டது. இதன் திரை அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும்.
இந்த பிரம்மாண்டமான திரை கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளதால், திரைக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்கும். இதில் 41 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது.

இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்தியாவில் இந்த மாதம் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற நோக்கியா வட்டார தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலையில் வெளியாகும் என்ற தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாப்போம்.
8.5.12 by ஈரோடு தங்கதுரை · 1
27.4.12
வணக்கம் நண்பர்களே, இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று ( ஏப்ரல் 27 ) முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அதன் விலையையும் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதன்படி 16ஜிபி அளவுள்ள புதிய ஐபேட் ரூ.30500க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் 36500க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.42500க்கு விற்கப்படும்.
அடுத்ததாக வைபை+ மற்றும் 4ஜி வசதியுடன் வரும் 16ஜிபி ஐபேட் ரூ.38900க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் ரூ.44900க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.50900க்கு விற்கப்படும்.

இந்த புதிய ஐபேடின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இது புதிய ரெட்டினா டிஸ்ப்ளே, க்வட் கோர் க்ராபிக்சுடன் கூடிய ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப், 5 மெகா பிக்சல் ஐசைட் கேமரா மற்றும் 1080 எச்டி வீடியோ வசதி மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.
இந்த புதிய ஐபேட் இந்தியாவில் வெற்றிக் கனியைப் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் .
27.4.12 by ஈரோடு தங்கதுரை · 0
நண்பர்களே வணக்கம் , செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் பிளாக்பெர்ரி நிறுவனம். இப்போது கர்வ்-9220 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு வெளியான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் 8520 ஸ்மார்ட்போன் மாடலையும்விட, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டது.
புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன், பிளாக்பெர்ரி-7.1 ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும்விட 1.2 மில்லி மீட்டர் மெலிதான தோற்றம் கொண்டது பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன். இதனால் கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தினால் பார்ப்பவர்களின் கண்களை எளிதாக கவர்ந்துவிடும்.

பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் 2.44 இஞ்ச் திரை வசதியை வழங்கும். பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1450 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் அதிக ஆற்றலை வழங்கும். இதனால் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 432 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.
இதே பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1150 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. இதில் 4 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 408 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.

இதனால் பேட்டரியை பொருத்த வரையில் பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும், பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போனில் கூடுதல் பேட்டரி பேக்கப் வசதியை பெற முடியும்.
இன்னும் பற்பல வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த மாடல் குறைந்த விலை பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.
by ஈரோடு தங்கதுரை · 0
நண்பர்களே வணக்கம், இந்தியாவில் இப்போது மலிவு விலையில் ஏராளமான ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் வருகின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் எச்சிஎல் மி டேப்லெட் யு1, சின்க் ஸட்990, ஐபெரி ஆக்சஸ் எஎக்ஸ்௦ போன்ற டேப்லெட்டுகள் ரூ.10000க்கும் குறைவாக விற்கப்படுகின்றன. இவை இந்திய தயாரிப்புகளாகும்.
அந்த வகையில் இந்தியாவில் தயாராயிருக்கும் மைக்ரோமேக்ஸ் பன்புக் என்ற டேப்லெட் பற்றித்தான் இந்த பதிவு. இந்த மைக்ரோமேக்ஸ் பன்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றது.

இந்த பன்புக் 1.2 ஜிஹெர்ட்ஸ் எஆர்எம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர் மற்றும் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது மிக வேகமாக இயங்கும். அதே நேரத்தில் வீடியோ கேமையும் இதில் சிறப்பாக விளையாடலாம்.

இந்த டேப்லெட் 480×800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பளிச்சென்று இருக்கிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் டிசி, மினி யுஎஸ்பி, மின் எச்டிஎம்ஐ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. அதனால் இதன் 4ஜிபி மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட்டி்ல 1080பி ப்ளேபேக் உள்ளதால் இதை எச்டி டிவியுடன் எளிதாக இணைக்க முடியும். இதன் 0.3 முகப்பு கேமரா மூலம் அழகான வீடியோ உரையாடல் நடத்த முடியும்.

மேலும் மைக்ரோமேக்சின் பல்வேறு அப்ளிகேசன்களை இந்த டே்பலெட் வைத்திருப்பதால் இதில் கல்வி சார்ந்த தகவல்கள், கேம்கள், படங்கள், லைவ் டிவி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடியும்.
இதன் விலை ரூ.6499 மட்டுமே. இந்த மைக்ரோமேக்ஸ் டேப்லெட்டுதான் இந்தியாவில் மிகக் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும்.
நான் வாங்கி விட்டேன் , மிகவும் அருமையாக உள்ளது ..!
by ஈரோடு தங்கதுரை · 5
18.4.12
நண்பர்களே வணக்கம், செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.
தவிர்க்கலாம்.
ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.

முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும்
கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.
கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.
முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.

பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம். பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.
இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.
18.4.12 by ஈரோடு தங்கதுரை · 3
நண்பர்களே வணக்கம், கிரிகெட் கிங் என்று பட்டம் பெற்ற சச்சின் டென்டுல்கர் பயன்படு்த்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பல புதிய புதிய மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வந்தாலும், பெரிய பிரபலங்கள் எந்த மொபைலை பயன்படு்த்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும்.

அந்த அடிப்படையில் சென்சுரி நாயகன் சச்சின் டென்டுல்கர் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் போர்ஷே பி-9981 என்ற ஸ்மார்ட்போனை பயன்படு்த்தும் தகவல் ட்விட்டர் மூலம் வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தின் மூலம் சச்சின் டென்டுல்கர் பயன்படுத்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிஎப்டி தொடுதிரையில், கியூவர்டி கீப்பேட் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் 2.8 இஞ்ச் பிக்ஸல் திரையினையும் கொண்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.
8ஜிபி வரை மெமரி வசதியினை கொடு்க்கும் இந்த ஸ்மார்ட்போனில், 16ஜிபி வரை கூடுதல் மெமரியினை பெற இதன் மைக்ரோஎஸ்டி வசதி சப்போர்ட் செய்கிறது. அதிக வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் அதிகம் தான்.
by ஈரோடு தங்கதுரை · 0
நண்பர்களே வணக்கம்.
14 வருடமாக ஆசியாவில் மொபைல்போன் விற்பனையில் முதல் இடம் வகித்து வந்த நோக்கியா நிறுவனத்தை முந்திவிட்டது சாம்சங் நிறுவனம். இந்த செய்தி நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக தான் இருக்கும்.
ஏனெனில் மொபைல் தயாரிப்புகள் ஆசியாவில் குறைவாக இருந்த காலத்திலேயே வாடிக்கையாளர்களை மொபைல் வாங்க தூண்டும் அளவிற்கு பல புதிய தொழில் நுட்ப சாதனங்களை கொடுத்தது நோக்கியா நிறுவனம்.

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே 9.2 கோடி மொபைல்போன்களை விற்பனை செய்து சாம்சங், நோக்கியா நிறுவனத்தின் விற்பனையையும் முந்திவிட்டது.
நோக்கியா நிறுவனம் 8.3 கோடி விற்பனையை கொடுத்துள்ளது. இதில் 1.2 கோடி ஸ்மார்ட்போன்களையும், 7.1 குறைந்த விலை மொபைல் மாடல்களையும் விற்பனை செய்துள்ளது. இது நிச்சயம் சாம்சங் நிறுவனம் செய்த பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தின் பெரிய வெற்றிக்கு கேலக்ஸி மொபைல் மாடல் ஒரு முக்கிய காரணம். சாம்சங் கேலக்ஸி சிரீஸ் ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவனம் கொடுத்திருக்கும் அகன்ற திரை வசதி மற்றும் பயன்படுத்துவதற்கு அரிய தொழில் நுட்பங்கள், அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது.
இந்த முறை துவக்க ஆண்டிலேயே சாம்சங் நிறுவனம் பெரிய சாதனையில் அசத்தி இருக்கிறது. எப்போதும் முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும் சாம்சங் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் பலத்த விற்பனை சாதனைக்கு அடுத்ததாக என்ன யுக்தியை கையாளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய மாற்றங்களை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
by ஈரோடு தங்கதுரை · 0

நம்மால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வாங் ஆகும். இவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஆவார்.
இந்த செய்தியை சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாணவர் ஆப்பிளின் எந்த மாடல்களை வாங்கினார் என்று அந்த செய்தி குறிப்பிடவில்லை.
வாங் தனது கிட்னியை விற்றதன் மூலம் அவருக்கு 3500 அமெரிக்க டாலர்கள் (175000 ரூபாய்) கிடைத்துள்ளது. அதை வைத்து அவர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடை வாங்கி இருக்கிறார்.

தனது மகனின் கைகளில் ஐபேட் மற்றும் ஐபோன் இருப்பதைப் பார்த்த வாங்கின் அம்மா அவை வந்ததன் காரணத்தை வற்புறுத்தி கேட்டதன் விளைவாக தனது கிட்னியை விற்றதை வாங் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் இதில் ஈடுபட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஒரு டாக்டரும் அடக்கம். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
by ஈரோடு தங்கதுரை · 0
Subscribe to:
Posts (Atom)